Siddhamarkkam.com

 

 

 

சோபகிருது வருட வெண்பா பலன்

சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்
உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகும் என்றே யுரை.

 

 

இன்று தொடங்கும் இந்த சோபகிருது வருடத்தில் பழமை வாய்ந்த ஊர்கள் எல்லா சிறப்பும் செழிப்பும் அடையும் மக்கள் மத்தியில் போட்டி பொறாமை கோபம் நீங்கி நற்குணங்கள் பெருக அனைவரும் ஒற்றுமையாக மங்களகரமாக வாழ்வார்கள், மழை கண்டு அவை பொய்க்காமல் பொழியும் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று சுபமங்களமாக வாழ்வார்கள் என்றுரைத்தேன் . 

இராஜா - புதன் 
மந்திரி - சுக்கிரன் 
அர்க்காதிபதி - குரு 
மேகாதிபதி - குரு 
ஸஸ்யாதிபதி - சந்திரன் 
சேனாதிபதி - குரு 
இரசாதிபதி - புதன் 
தானியாதிபதி - சனி 
நீராதிபதி - சந்திரன் 

மழை இருக்கும் ஆனால் காற்று அதிகமாக வீசுவதால் பலனின்றி போகும், ஆனாலும் மழையை எதிர்பார்த்திராத உயிர்கள் செழிக்கும் , யாகங்கள் பல பகுதிகளிலும் நடக்கும் , அரசர்கள் சினம் கொள்ள வாய்ப்புகள் அதிகம் ,எழுத்து துறை அறிஞர்கள் விருத்தி அடைவார்கள் , மக்களில் சிலர் பாவ செயல்களில் ஈடுபடுவார்கள் , வியாதிகள் வருவது போல் இருக்கும் ஆனால் இடைக்காலத்தில் அவைகள் சரியாகும். அரசர்கள் மக்களுக்கு தேவையானதை செய்து நற்பெயர் எடுப்பார்கள். ரோஜர் வைத்தியர்கள் இவர்களுக்கு நன்மை விளைவிக்கும் தன தானியம் அபிவிருத்தியாகும். நெய் வெண்ணெய் வெள்ளம் சர்க்கரை தேன் முதல்லயே வகையில் முதலில் வகைகள் விலை குறையும் , நாடெங்கும் ரத்தினம் வெண்கலம் முத்து வைரம் ஆபரணங்கள் விருத்தியாகும் ஆக இந்த சோபகிருது ஆண்டு மக்கள் அரசர் வைத்தியர் புரோகிதர் எழுத்தாளர் இவர்களுக்கு நன் மதிப்பும் பெருமையும் கிடைக்கும் பயிர் செழிக்கும் நாடு சுபிட்சம் அடையும் . 

முந்தைய பதிவுகள்

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி

அன்பன்
அ இராகவன்


 April 29th, 2023 அன்று புதிய பதிவுடன்
©-2024 - தெய்வீக சித்தமார்க்கம்